நூல்கள்›நற்றிணை›பாடல் 1554

பாடல் 1554

பாலை பாடிய பெருங்கடுங்கோ

அன்பினர், மன்னும் பெரியர்; அதன்தலை,

'பின்பனி அமையம் வரும்' என, முன்பனிக்

கொழுந்து முந்துறீஇக் குரவு அரும்பினவே;

'புணர்ந்தீர் புணர்மினோ' என்ன, இணர்மிசைச்

செங் கண் இருங் குயில் எதிர் குரல் பயிற்றும் . . . .

இன்ப வேனிலும் வந்தன்று; நம்வயின்

'பிரியலம்' என்று, தௌத்தோர் தேஎத்து,

இனி எவன் மொழிகோ, யானே - கயன் அறக்

கண் அழிந்து உலறிய பல் மர நெடு நெறி

வில் மூசு கவலை விலங்கிய . . . .

வெம் முனை அருஞ் சுரம் முன்னியோர்க்கே?

பாலை

← பாடல் 1553பாடல் 1555 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்