நூல்கள்›நற்றிணை›பாடல் 1553

பாடல் 1553

உலோச்சனார்

இவள்தன், காமம் பெருமையின், காலை என்னாள்; நின்

அன்பு பெரிது உடைமையின், அளித்தல் வேண்டி,

பகலும் வருதி, பல் பூங் கானல்;

இன்னீர்ஆகலோ இனிதால் எனின், இவள்

அலரின் அருங் கடிப் படுகுவள்; அதனால் . . . .

எல்லி வம்மோ! - மெல்லம் புலம்ப!

சுறவினம் கலித்த நிறை இரும் பரப்பின்

துறையினும் துஞ்சாக் கண்ணர்

பெண்டிரும் உடைத்து, இவ் அம்பல் ஊரே.

நெய்தல்

← பாடல் 1552பாடல் 1554 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்