நூல்கள்›நற்றிணை›பாடல் 1547

பாடல் 1547

கபிலர்

இசை பட வாழ்பவர் செல்வம் போலக்

காண் தொறும் பொலியும், கதழ் வாய் வேழம்,

இருங் கேழ் வயப் புலி வெரீஇ, அயலது

கருங் கால் வேங்கை ஊறுபட மறலி,

பெருஞ் சினம் தணியும் குன்றநாடன் . . . .

நனி பெரிது இனியனாயினும், துனி படர்ந்து

ஊடல் உறுவேன் - தோழி! - நீடு

புலம்பு சேண் அகல நீக்கி,

புலவி உணர்த்தல் வன்மையானே.

குறிஞ்சி

← பாடல் 1546பாடல் 1548 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்