நூல்கள்›நற்றிணை›பாடல் 1538

பாடல் 1538

நொச்சி நியமங் கிழார்

விறல் சால் விளங்கு இழை நெகிழ, விம்மி,

அறல் போல் தௌ மணி இடை முலை நனைப்ப,

விளிவு இல கலுழும் கண்ணொடு, பெரிது அழிந்து,

எவன் இனைபு வாடுதி? - சுடர் நுதற் குறுமகள்!

செல்வார் அல்லர் நம் காதலர்; செலினும், . . . .

நோன்மார் அல்லர், நோயே; மற்று அவர்

கொன்னும் நம்புங் குரையர் தாமே;

சிறந்த அன்பினர்; சாயலும் உரியர்;

பிரிந்த நம்மினும் இரங்கி, அரும் பொருள்

முடியாதுஆயினும் வருவர்; அதன்தலை, . . . .

இன் துணைப் பிரிந்தோர் நாடித்

தருவது போலும், இப் பெரு மழைக் குரலே?

பாலை

← பாடல் 1537பாடல் 1539 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்