நூல்கள்›நற்றிணை›பாடல் 1533

பாடல் 1533

உலோச்சனார்

முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்,

தடந் தாட் தாழை முள்ளுடை நெடுந் தோட்டு

அக மடல் பொதுளிய முகை முதிர் வான் பூங்

கோடு வார்ந்தன்ன, வெண் பூத் தாழை

எறி திரை உதைத்தலின், பொங்கித் தாது சோர்பு, . . . .

சிறுகுடிப் பாக்கத்து மறுகு புலா மறுக்கும்

மணம் கமழ் கானல், இயைந்த நம் கேண்மை

ஒரு நாள் பிரியினும் உய்வு அரிது என்னாது,

கதழ் பரி நெடுந் தேர் வரவு ஆண்டு அழுங்கச்

செய்த தன் தப்பல் அன்றியும், . . . .

உயவுப் புணர்ந்தன்று, இவ் அழுங்கல் ஊரே.

நெய்தல்

← பாடல் 1532பாடல் 1534 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்