நூல்கள்›நற்றிணை›பாடல் 1530

பாடல் 1530

கூடலூர்ப் பல் கண்ணனார்

கண்ணி கட்டிய கதிர அன்ன

ஒண் குரல் நொச்சித் தெரியல் சூடி,

யாறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில்,

'சாறு' என நுவலும் முது வாய்க் குயவ!

ஈதும் ஆங்கண் நுவன்றிசின் மாதோ- . . . .

ஆம்பல் அமன்ற தீம் பெரும் பழனத்துப்

பொய்கை ஊர்க்குப் போவோய்ஆகி,

'கை கவர் நரம்பின் பனுவற் பாணன்

செய்த அல்லல் பல்குவ-வை எயிற்று,

ஐது அகல் அல்குல் மகளிர்!-இவன் . . . .

பொய் பொதி கொடுஞ் சொல் ஓம்புமின்' எனவே.

மருதம்

← பாடல் 1529பாடல் 1531 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்