நூல்கள்›நற்றிணை›பாடல் 1528

பாடல் 1528

கயமனார்

சேயின் வரூஉம் மதவலி! யா உயர்ந்து

ஓமை நீடிய கான் இடை அத்தம்,

முன்நாள் உம்பர்க் கழிந்த என் மகள்

கண்பட, நீர் ஆழ்ந்தன்றே; தந்தை

தன் ஊர் இடவயின் தொழுவேன்; நுண் பல் . . . .

கோடு ஏந்து அல்குல் அரும்பிய திதலை,

வார்ந்து இலங்கு வால் எயிற்று, பொலிந்த தாஅர்,

சில் வளை, பல் கூந்தலளே, அவளே;

மை அணல் எருத்தின் முன்பின் தடக் கை

வல் வில் அம்பின் எய்யா வண் மகிழ்த் . . . .

தந்தைதன் ஊர் இதுவே;

ஈன்றேன் யானே; பொலிக, நும் பெயரே!

பாலை

← பாடல் 1527பாடல் 1529 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்