நூல்கள்›நற்றிணை›பாடல் 1527

பாடல் 1527

நக்கீரர்

'தோளே தொடி நெகிழ்ந்தனவே; நுதலே

பீர் இவர் மலரின் பசப்பு ஊர்ந்தன்றே;

கண்ணும் தண் பனி வைகின; அன்னோ!

தௌந்தனம் மன்ற; தேயர் என் உயிர்' என,

ஆழல், வாழி- தோழி!- நீ; நின் . . . .

தாழ்ந்து ஒலி கதுப்பின் வீழ்ந்த காலொடு,

வண்டு படு புது மலர் உண்துறைத் தரீஇய,

பெரு மட மகளிர் முன்கைச் சிறு கோல்

பொலந் தொடி போல மின்னி, கணங் கொள்

இன் இசை முரசின் இரங்கி, மன்னர் . . . .

எயில் ஊர் பல் தோல் போலச்

செல் மழை தவழும், அவர் நல் மலை நாட்டே.

பாலை

← பாடல் 1526பாடல் 1528 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்