நூல்கள்›நற்றிணை›பாடல் 1525

பாடல் 1525

ஆசிரியர் அறியப்படவில்லை

அருளாயாகலோ, கொடிதே!- இருங் கழிக்

குருளை நீர்நாய் கொழு மீன் மாந்தி,

தில்லைஅம் பொதும்பில் பள்ளி கொள்ளும்

மெல்லம் புலம்ப! யான் கண்டிசினே-

கல்லென் புள்ளின் கானல்அம் தொண்டி, . . . .

நெல் அரி தொழுவர் கூர் வாள் உற்றென,

பல் இதழ் தயங்கிய கூம்பா நெய்தல்

நீர் அலைத் தோற்றம் போல,

ஈரிய கலுழும், நீ நயந்தோள் கண்ணே.

நெய்தல்

← பாடல் 1524பாடல் 1526 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்