நூல்கள்›நற்றிணை›பாடல் 1522

பாடல் 1522

ஆசிரியர் அறியப்படவில்லை

'குருதி வேட்கை உரு கெழு வய மான்

வலி மிகு முன்பின் மழ களிறு பார்க்கும்

மரம் பயில் சோலை மலிய, பூழியர்

உருவத் துருவின், நாள் மேயல் ஆரும்

மாரி எண்கின் மலைச் சுர நீள் இடை, . . . .

நீ நயந்து வருதல் எவன்?' எனப் பல புலந்து,

அழுதனை உறையும் அம் மா அரிவை!

பயம் கெழு பலவின் கொல்லிக் குட வரைப்

பூதம் புணர்த்த புதிது இயல் பாவை

விரி கதிர் இள வெயில் தோன்றி அன்ன, நின் . . . .

ஆய் நலம் உள்ளி வரின், எமக்கு

ஏமம் ஆகும், மலைமுதல் ஆறே.

குறிஞ்சி

← பாடல் 1521பாடல் 1523 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்