நூல்கள்›நற்றிணை›பாடல் 1521

பாடல் 1521

உலோச்சனார்

'சிறு வீ ஞாழல் தேன் தோய் ஒள் இணர்

நேர் இழை மகளிர் வார் மணல் இழைத்த

வண்டற் பாவை வன முலை முற்றத்து,

ஒண் பொறிச் சுணங்கின் ஐது படத் தாஅம்

கண்டல் வேலிக் காமர் சிறுகுடி, . . . .

எல்லி வந்தன்றோ தேர்?' எனச் சொல்லி,

அலர் எழுந்தன்று இவ் ஊரே; பலருளும்

என் நோக்கினளே அன்னை; நாளை

மணிப் பூ முண்டகம் கொய்யேன் ஆயின்,

அணிக் கவின் உண்மையோ அரிதே; மணிக் கழி . . . .

நறும் பூங் கானல் வந்து, அவர்

வறுந் தேர் போதல் அதனினும் அரிதே.

நெய்தல்

← பாடல் 1520பாடல் 1522 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்