நூல்கள்›நற்றிணை›பாடல் 1519

பாடல் 1519

ஆசிரியர் அறியப்படவில்லை

தம் அலது இல்லா நம் நயந்து அருளி

இன்னும் வாரார்; ஆயினும், சென்னியர்,

தெறல் அருங் கடவுள் முன்னர், சீறியாழ்

நரம்பு இசைத்தன்ன இன் குரற் குருகின்

கங்கை வங்கம் போகுவர்கொல்லோ- . . . .

எவ் வினை செய்வர்கொல் தாமே?- வெவ் வினைக்

கொலை வல் வேட்டுவன் வலை பரிந்து போகிய

கானப் புறவின் சேவல் வாய் நூல்

சிலம்பி அம் சினை வெரூஉம்,

அலங்கல் உலவை அம் காடு இறந்தோரே? . . . .

பாலை

← பாடல் 1518பாடல் 1520 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்