நூல்கள்›நற்றிணை›பாடல் 1514

பாடல் 1514

ஆசிரியர் அறியப்படவில்லை

ஒரு மகள் உடையேன் மன்னே; அவளும்

செரு மிகு மொய்ம்பின் கூர்வேற் காளையொடு

பெரு மலை அருஞ் சுரம் நெருநல் சென்றனள்;

'இனியே, தாங்கு நின் அவலம்' என்றிர்; அது மற்று

யாங்ஙனம் ஒல்லுமோ? அறிவுடையீரே! . . . .

உள்ளின் உள்ளம் வேமே- உண்கண்

மணி வாழ் பாவை நடை கற்றன்ன என்

அணி இயற் குறுமகள் ஆடிய

மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே.

பாலை

← பாடல் 1513பாடல் 1515 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்