நூல்கள்›நற்றிணை›பாடல் 1515

பாடல் 1515

ஆசிரியர் அறியப்படவில்லை

ஆனா நோயோடு அழி படர்க் கலங்கி,

காமம் கைம்மிக, கையறு துயரம்

காணவும் நல்காய் ஆயின்- பாணர்

பரிசில் பெற்ற விரி உளை நல் மான்

கவி குளம்பு பொருத கல் மிசைச் சிறு நெறி, . . . .

இரவலர் மெலியாது ஏறும், பொறையன்

உரை சால் உயர் வரைக் கொல்லிக் குடவயின்,

அகல் இலைக் காந்தள் அலங்கு குலைப் பாய்ந்து,

பறவை இழைத்த பல் கண் இறாஅல்

தேனுடை நெடு வரை, தெய்வம் எழுதிய . . . .

வினை மாண் பாவை அன்னோள்

கொலை சூழ்ந்தனளால்- நோகோ யானே.

குறிஞ்சி

← பாடல் 1514பாடல் 1516 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்