நூல்கள்›நற்றிணை›பாடல் 1511

பாடல் 1511

ஆசிரியர் அறியப்படவில்லை

உள் இறைக் குரீஇக் கார் அணற் சேவல்

பிற புலத் துணையோடு உறை புலத்து அல்கி,

வந்ததன் செவ்வி நோக்கி, பேடை

நெறி கிளர் ஈங்கைப் பூவின் அன்ன

சிறு பல் பிள்ளையொடு குடம்பை கடிதலின், . . . .

துவலையின் நனைந்த புறத்தது அயலது

கூரல் இருக்கை அருளி, நெடிது நினைந்து,

ஈர நெஞ்சின் தன் வயின் விளிப்ப,

கையற வந்த மையல் மாலை

இரீஇய ஆகலின், இன் ஒலி இழந்த . . . .

தார் அணி புரவி தண் பயிர் துமிப்ப

வந்தன்று, பெருவிறல் தேரே;

உய்ந்தன்றாகும், இவள் ஆய் நுதற் கவினே.

முல்லை

← பாடல் 1510பாடல் 1512 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்