நூல்கள்›நற்றிணை›பாடல் 1509

பாடல் 1509

ஆசிரியர் அறியப்படவில்லை

இல் எழு வயலை ஈற்று ஆ தின்றென,

பந்து நிலத்து எறிந்து, பாவை நீக்கி,

அவ் வயிறு அலைத்த என் செய் வினைக் குறுமகள்

மான் அமர்ப்பன்ன மையல் நோக்கமொடு,

யானும் தாயும் மடுப்ப, தேனொடு . . . .

தீம் பால் உண்ணாள் வீங்குவனள் விம்மி,

நெருநலும் அனையள்மன்னே; இன்றே,

மை அணற் காளை பொய் புகலாக,

அருஞ் சுரம் இறந்தனள் என்ப- தன்

முருந்து ஏர் வெண் பல் முகிழ் நகை திறந்தே. . . . .

பாலை

← பாடல் 1508பாடல் 1510 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்