நூல்கள்›நற்றிணை›பாடல் 1506

பாடல் 1506

ஆசிரியர் அறியப்படவில்லை

எம் நயந்து உறைவி ஆயின், யாம் நயந்து

நல்கினம் விட்டது என்? நலத்தோன் அவ் வயின்

சால்பின் அளித்தல் அறியாது, 'அவட்கு அவள்

காதலள் என்னுமோ?' உரைத்திசின்- தோழி!-

நிரைத்த யானை முகத்து வரி கடுப்பப் . . . .

போது பொதி உடைந்த ஒண் செங் காந்தள்

வாழை அம் சிலம்பின் வம்பு படக் குவைஇ,

யாழ் ஓர்த்தன்ன இன் குரல் இன வண்டு,

அருவி முழவின் பாடொடு ஒராங்கு,

மென்மெல இசைக்கும் சாரல், . . . .

குன்ற வேலித் தம் உறைவின் ஊரே.

குறிஞ்சி

← பாடல் 1505பாடல் 1507 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்