நூல்கள்›நற்றிணை›பாடல் 1505

பாடல் 1505

ஆசிரியர் அறியப்படவில்லை

நெடுங் கடல் அலைத்த கொடுந் திமிற் பரதவர்

கொழு மீன் கொள்ளை அழி மணல் குவைஇ,

மீன் நெய் அட்டிக் கிளிஞ்சில் பொத்திய

சிறு தீ விளக்கில் துஞ்சும், நறு மலர்ப்

புன்னை ஓங்கிய, துறைவனொடு அன்னை . . . .

தான் அறிந்தன்றோ இலளே; பானாள்

சேரிஅம் பெண்டிர் சிறு சொல் நம்பி,

சுடுவான் போல நோக்கும்,

அடு பால் அன்ன என் பசலை மெய்யே.

நெய்தல்

← பாடல் 1504பாடல் 1506 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்