நூல்கள்›நற்றிணை›பாடல் 1504

பாடல் 1504

ஆசிரியர் அறியப்படவில்லை

'கற்றை ஈந்தின் முற்றுக் குலை அன்ன

ஆள் இல் அத்தத் தாள் அம் போந்தைக்

கோளுடை நெடுஞ் சினை ஆண் குரல் விளிப்பின்,

புலி எதிர் வழங்கும் வளி வழங்கு ஆர் இடைச்

சென்ற காதலர் வந்து, இனிது முயங்கி, . . . .

பிரியாது ஒரு வழி உறையினும், பெரிது அழிந்து

உயங்கினை, மடந்தை!' என்றி- தோழி!-

அற்றும் ஆகும், அஃது அறியாதோர்க்கே;

வீழாக் கொள்கை வீழ்ந்த கொண்டி

மல்லல் மார்பு மடுத்தனன் . . . .

புல்லு மற்று எவனோ அன்பு இலங்கடையே?

பாலை

← பாடல் 1503பாடல் 1505 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்