நூல்கள்›நற்றிணை›பாடல் 1502

பாடல் 1502

ஆசிரியர் அறியப்படவில்லை

விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி,

மறந்தனம் துறந்த காழ் முளை அகைய,

'நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப;

நும்மினும் சிறந்தது; நுவ்வை ஆகும்' என்று,

அன்னை கூறினள், புன்னையது நலனே- . . . .

அம்ம! நாணுதும், நும்மொடு நகையே;

விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப,

வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்த்

துறை கெழு கொண்க!- நீ நல்கின்,

இறைபடு நீழல் பிறவுமார் உளவே. . . . .

நெய்தல்

← பாடல் 1501பாடல் 1503 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்