நூல்கள்›நற்றிணை›பாடல் 1501

பாடல் 1501

ஆசிரியர் அறியப்படவில்லை

நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை

வேனிற் குன்றத்து வெவ் வரைக் கவாஅன்

நிலம் செல, செல்லாக் கயந் தலைக் குழவி

சேரி அம் பெண்டிர் நெஞ்சத்து எறிய

ஊர் ஆன்கன்றொடு புகுதும் நாடன் . . . .

பன் மலை அருஞ் சுரம் இறப்பின், நம் விட்டு,

யாங்கு வல்லுந மற்றே- ஞாங்க

வினைப் பூண் தெண் மணி வீழ்ந்தன நிகர்ப்பக்

கழுது கால்கொள்ளும் பொழுது கொள் பானாள்,

ஆர்வ நெஞ்சமொடு அளைஇ, . . . .

மார்பு உறப் படுத்தல் மரீஇய கண்ணே?

பாலை

← பாடல் 1500பாடல் 1502 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்