நூல்கள்›நற்றிணை›பாடல் 1498

பாடல் 1498

ஆசிரியர் அறியப்படவில்லை

சுரும்பு உண விரிந்த கருங் கால் வேங்கைப்

பெருஞ் சினைத் தொடுத்த கொழுங் கண் இறாஅல்,

புள்ளுற்றுக் கசிந்த தீம் தேன் கல் அளைக்

குறக் குறுமாக்கள் உண்ட மிச்சிலைப்

புன் தலை மந்தி வன் பறழ் நக்கும் . . . .

நன் மலை நாட! பண்பு எனப் படுமோ-

நின் நயந்து உறைவி இன் உயிர் உள்ளாய்,

அணங்குடை அரவின் ஆர் இருள் நடு நாள்,

மை படு சிறு நெறி எஃகு துணை ஆக

ஆரம் கமழும் மார்பினை, . . . .

சாரற் சிறுகுடி ஈங்கு நீ வரலே?

குறிஞ்சி

← பாடல் 1497பாடல் 1499 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்