நூல்கள்›நற்றிணை›பாடல் 1497

பாடல் 1497

ஆசிரியர் அறியப்படவில்லை

கருங் கோட்டுப் புன்னைக் குடக்கு வாங்கு பெருஞ் சினை

விருந்தின் வெண் குருகு ஆர்ப்பின், ஆஅய்

வண் மகிழ் நாளவைப் பரிசில் பெற்ற

பண் அமை நெடுந் தேர்ப் பாணியின், ஒலிக்கும்

தண்ணம் துறைவன் தூதொடும் வந்த . . . .

பயன் தெரி பனுவற் பை தீர் பாண!

நின் வாய்ப் பணி மொழி களையா- பல் மாண்

புது வீ ஞாழலொடு புன்னை தாஅம்

மணம் கமழ் கானல், மாண் நலம் இழந்த

இறை ஏர் எல் வளைக் குறுமகள் . . . .

பிறை ஏர் திரு நுதல் பாஅய பசப்பே.

நெய்தல்

← பாடல் 1496பாடல் 1498 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்