நூல்கள்›நற்றிணை›பாடல் 1495

பாடல் 1495

ஆசிரியர் அறியப்படவில்லை

அமர்க் கண் ஆமான் அரு நிறம் முள்காது

பணைத்த பகழிப் போக்கு நினைந்து, கானவன்,

'அணங்கொடு நின்றது மலை, வான் கொள்க' எனக்

கடவுள் ஓங்கு வரை பேண்மார், வேட்டு எழுந்து,

கிளையொடு மகிழும் குன்ற நாடன் . . . .

அடைதரும்தோறும், அருமை தனக்கு உரைப்ப,

'நப் புணர்வு இல்லா நயன் இலோர் நட்பு

அன்ன ஆகுக' என்னான்;

ஒல்காது ஒழி; மிகப் பல்கின தூதே.

குறிஞ்சி

← பாடல் 1494பாடல் 1496 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்