நூல்கள்›நற்றிணை›பாடல் 1491

பாடல் 1491

ஆசிரியர் அறியப்படவில்லை

இறையும், அருந் தொழில் முடித்தென, பொறைய,

கண் போல் நீலம் சுனைதொறும் மலர,

வீ ததர் வேங்கைய வியல் நெடும் புறவின்,

இம்மென் பறவை ஈண்டு கிளை இரிய,

நெடுந் தெரு அன்ன நேர் கொள் நெடு வழி, . . . .

இளையர் ஏகுவனர் பரிப்ப, வளை எனக்

காந்தள் வள் இதழ் கவிகுளம்பு அறுப்ப,

தோள் வலி யாப்ப, ஈண்டு நம் வரவினைப்

புள் அறிவுறீஇயினகொல்லோ- தௌளிதின்

காதல் கெழுமிய நலத்தள், ஏதில் . . . .

புதல்வற் காட்டிப் பொய்க்கும்

திதலை அல்குல் தேம் மொழியாட்கே?

முல்லை

← பாடல் 1490பாடல் 1492 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்