நூல்கள்›நற்றிணை›பாடல் 1490

பாடல் 1490

ஆசிரியர் அறியப்படவில்லை

நயனும், நண்பும், நாணு நன்கு உடைமையும்,

பயனும், பண்பும், பாடு அறிந்து ஒழுகலும்,

நும்மினும் அறிகுவென்மன்னே- கம்மென

எதிர்த்த தித்தி, ஏர் இள வன முலை

விதிர்த்து விட்டன்ன அந் நுண் சுணங்கின், . . . .

ஐம் பால் வகுத்த கூந்தல், செம் பொறி

திரு நுதல் பொலிந்த தேம் பாய் ஓதி,

முது நீர் இலஞ்சிப் பூத்த குவளை

எதிர் மலர்ப் பிணையல் அன்ன இவள்

அரி மதர் மழைக் கண் காணா ஊங்கே. . . . .

குறிஞ்சி

← பாடல் 1489பாடல் 1491 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்