நூல்கள்›நற்றிணை›பாடல் 1489

பாடல் 1489

கண்ணம்புல்லனார்

மணி துணிந்தன்ன மா இரும் பரப்பின்

உரவுத் திரை கொழீஇய பூ மலி பெருந் துறை,

நிலவுக் குவித்தன்ன மோட்டு மணல் இடிகரை,

கோடு துணர்ந்தன்ன குருகு ஒழுக்கு எண்ணி,

எல்லை கழிப்பினம்ஆயின், மெல்ல . . . .

வளி சீத்து வரித்த புன்னை முன்றில்,

கொழு மீன் ஆர்கைச் செழு நகர்ச் செலீஇய,

'எழு' எனின், அவளும் ஒல்லாள்; யாமும்,

'ஒழி' என அல்லம் ஆயினம்; யாமத்து,

உடைதிரை ஒலியின் துஞ்சும் மலி கடற் . . . .

சில் குடிப் பாக்கம் கல்லென

அல்குவதாக, நீ அமர்ந்த தேரே!

நெய்தல்

← பாடல் 1488பாடல் 1490 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்