நூல்கள்›நற்றிணை›பாடல் 1486

பாடல் 1486

கண்ணங் கொற்றனார்

நீயே, அடி அறிந்து ஒதுங்கா ஆர் இருள் வந்து, எம்

கடியுடை வியல் நகர்க் காவல் நீவியும்,

பேர் அன்பினையே- பெருங் கல் நாட!-

யாமே, நின்னும் நின் மலையும் பாடி, பல் நாள்

சிறு தினை காக்குவம் சேறும்; அதனால், . . . .

பகல் வந்தீமோ, பல் படர் அகல!

எருவை நீடிய பெரு வரைச் சிறுகுடி

அரியல் ஆர்ந்தவர் ஆயினும், பெரியர்;

பாடு இமிழ் விடர் முகை முழங்க,

ஆடு மழை இறுத்தது, எம் கோடு உயர் குன்றே. . . . .

குறிஞ்சி

← பாடல் 1485பாடல் 1487 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்