நூல்கள்›நற்றிணை›பாடல் 1487

பாடல் 1487

இள வேட்டனார்

இருங் கண் ஞாலத்து ஈண்டு தொழில் உதவிப்

பெரும் பெயல் பொழிந்த வழி நாள் அமையத்து,

பல் பொறி அரவின் செல் புறம் கடுப்ப

யாற்று அறல் நுணங்கிய நாட் பத வேனில்,

இணர் துதை மாஅத்த புணர் குயில் விளித்தொறும், . . . .

நம்வயின் நினையும் நெஞ்சமொடு, கைம்மிகக்

கேட்டொறும் கலுழுமால் பெரிதே- காட்ட

குறும் பொறை அயல நெடுந் தாள் வேங்கை

அம் பூந் தாது உக்கன்ன

நுண் பல் தித்தி மாஅயோளே. . . . .

பாலை

← பாடல் 1486பாடல் 1488 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்