நூல்கள்›நற்றிணை›பாடல் 1485

பாடல் 1485

பராயனார்

'ஒள் இழை மகளிரொடு ஓரையும் ஆடாய்,

வள் இதழ் நெய்தற் தொடலையும் புனையாய்,

விரி பூங் கானல் ஒரு சிறை நின்றோய்!

யாரையோ? நிற் தொழுதனெம் வினவுதும்:

கண்டோர் தண்டா நலத்தை- தெண் திரைப் . . . .

பெருங் கடல் பரப்பின் அமர்ந்து உறை அணங்கோ?

இருங் கழி மருங்கு நிலைபெற்றனையோ?

சொல், இனி, மடந்தை!' என்றனென்: அதன் எதிர்

முள் எயிற்று முறுவல் திறந்தன;

பல் இதழ் உண்கணும் பரந்தவால், பனியே. . . . .

நெய்தல்

← பாடல் 1484பாடல் 1486 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்