நூல்கள்›நற்றிணை›பாடல் 1481

பாடல் 1481

இளநாகனார்

நல் நுதல் பசப்பினும், பெருந் தோள் நெகிழினும்,

கொல் முரண் இரும் புலி அரும் புழைத் தாக்கிச்

செம் மறுக் கொண்ட வெண் கோட்டு யானை

கல் மிசை அருவியின் கழூஉஞ் சாரல்

வாரற்கதில்ல- தோழி!- கடுவன், . . . .

முறி ஆர் பெருங் கிளை அறிதல் அஞ்சி,

கறி வளர் அடுக்கத்து, களவினில் புணர்ந்த

செம் முக மந்தி செய்குறி, கருங் கால்

பொன் இணர் வேங்கைப் பூஞ் சினைச் செலீஇயர்,

குண்டு நீர் நெடுஞ் சுனை நோக்கிக் கவிழ்ந்து, தன் . . . .

புன் தலைப் பாறு மயிர் திருத்தும்

குன்ற நாடன் இரவினானே!

குறிஞ்சி

← பாடல் 1480பாடல் 1482 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்