நூல்கள்›நற்றிணை›பாடல் 1480

பாடல் 1480

கடுவன் இளமள்ளனார்

நகை நன்கு உடையன்- பாண!- நும் பெருமகன்:

'மிளை வலி சிதையக் களிறு பல பரப்பி,

அரண் பல கடந்த முரண் கொள் தானை

வழுதி, வாழிய பல! எனத் தொழுது, ஈண்டு

மன் எயில் உடையோர் போல, அஃது யாம் . . . .

என்னதும் பரியலோ இலம்' எனத் தண் நடைக்

கலி மா கடைஇ வந்து, எம் சேரித்

தாரும் கண்ணியும் காட்டி, ஒருமைய

நெஞ்சம் கொண்டமை விடுமோ? அஞ்ச,

கண்ணுடைச் சிறு கோல் பற்றிக் . . . .

கதம் பெரிது உடையள், யாய்; அழுங்கலோ இலளே.

மருதம்

← பாடல் 1479பாடல் 1481 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்