நூல்கள்›நற்றிணை›பாடல் 1479

பாடல் 1479

உலோச்சனார்

சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி,

மூக்கின் உச்சிச் சுட்டு விரல் சேர்த்தி,

மறுகில் பெண்டிர் அம்பல் தூற்ற,

சிறு கோல் வலந்தனள் அன்னை அலைப்ப,

அலந்தனென் வாழி- தோழி!- கானல் . . . .

புது மலர் தீண்டிய பூ நாறு குரூஉச் சுவல்

கடு மான் பரிய கதழ் பரி கடைஇ,

நடு நாள் வரூஉம் இயல் தேர்க் கொண்கனொடு

செலவு அயர்ந்திசினால், யானே;

அலர் சுமந்து ஒழிக, இவ் அழுங்கல் ஊரே! . . . .

நெய்தல்

← பாடல் 1478பாடல் 1480 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்