நூல்கள்›நற்றிணை›பாடல் 1478

பாடல் 1478

கள்ளம்பாளனார்

வண்ணம் நோக்கியும், மென் மொழி கூறியும்,

'நீ அவண் வருதல் ஆற்றாய்' எனத் தாம்

தொடங்கி ஆள்வினைப் பிரிந்தோர், இன்றே,

நெடுங் கயம் புரிந்த நீர் இல் நீள் இடை,

செங் கால் மராஅத்து அம் புடைப் பொருந்தி, . . . .

வாங்கு சிலை மறவர் வீங்கு நிலை அஞ்சாது,

கல் அளைச் செறிந்த வள் உகிர்ப் பிணவின்

இன் புனிற்று இடும்பை தீர, சினம் சிறந்து,

செங் கண் இரும் புலிக் கோள் வல் ஏற்றை

உயர் மருப்பு ஒருத்தல் புகர் முகம் பாயும் . . . .

அருஞ் சுரம் இறப்ப என்ப;

வருந்தேன்- தோழி!- வாய்க்க, அவர் செலவே!

பாலை

← பாடல் 1477பாடல் 1479 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்