நூல்கள்›நற்றிணை›பாடல் 1477

பாடல் 1477

கொள்ளம்பக்கனார்

யாங்கு ஆகுவமோ- 'அணி நுதற் குறுமகள்!

தேம் படு சாரற் சிறு தினைப் பெருங் குரல்

செவ் வாய்ப் பைங் கிளி கவர, நீ மற்று

எவ் வாய்ச் சென்றனை, அவண்?' எனக் கூறி,

அன்னை ஆனாள் கழற, முன் நின்று, . . . .

'அருவி ஆர்க்கும் பெரு வரை நாடனை

அறியலும் அறியேன்; காண்டலும் இலனே;

வெதிர் புனை தட்டையேன் மலர் பூக் கொய்து,

சுனை பாய்ந்து ஆடிற்றும் இலன்' என நினைவிலை

பொய்யல், அந்தோ! வாய்த்தனை? அது கேட்டு, . . . .

தலை இறைஞ்சினளே அன்னை;

செலவு ஒழிந்தனையால், அளியை நீ, புனத்தே?

குறிஞ்சி

← பாடல் 1476பாடல் 1478 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்