நூல்கள்›நற்றிணை›பாடல் 1472

பாடல் 1472

இடைக்காடனார்

வான் இகுபு சொரிந்த வயங்கு பெயற்கடை நாள்,

பாணி கொண்ட பல் கால் மெல் உறி

ஞெலி கோல் கலப் பை அதளொடு சுருக்கி,

பறிப் புறத்து இட்ட பால் நொடை இடையன்

நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்ப, . . . .

தண்டு கால் வைத்த ஒடுங்கு நிலை மடி விளி

சிறு தலைத் தொழுதி ஏமார்த்து அல்கும்

புறவினதுவே- பொய்யா யாணர்,

அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்,

முல்லை சான்ற கற்பின், . . . .

மெல் இயற் குறுமகள் உறைவின், ஊரே.

முல்லை

← பாடல் 1471பாடல் 1473 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்