நூல்கள்›நற்றிணை›பாடல் 1473

பாடல் 1473

கண்ணகாரன் கொற்றனார்

ஐதே கம்ம யானே; ஒய்யென,

தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து,

ஓரை ஆயமும் நொச்சியும் காண்தொறும்,

நீர் வார் கண்ணேன் கலுழும் என்னினும்,

கிள்ளையும், 'கிளை' எனக் கூஉம்; இளையோள் . . . .

வழு இலள் அம்ம, தானே; குழீஇ,

அம்பல் மூதூர் அலர் வாய்ப் பெண்டிர்

இன்னா இன் உரை கேட்ட சில் நாள்

அறியேன் போல உயிரேன்;

'நறிய நாறும் நின் கதுப்பு' என்றேனே. . . . .

பாலை

← பாடல் 1472பாடல் 1474 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்