நூல்கள்›நற்றிணை›பாடல் 1471

பாடல் 1471

சல்லியங்குமரனார்

இருஞ் சேறு ஆடிய கொடுங் கவுள், கய வாய்,

மாரி யானையின் மருங்குல் தீண்டி,

பொரி அரை ஞெமிர்ந்த புழற் காய்க் கொன்றை,

நீடிய சடையோடு ஆடா மேனிக்

குன்று உறை தவசியர் போல, பல உடன் . . . .

என்றூழ் நீள் இடைப் பொற்பத் தோன்றும்

அருஞ் சுரம் எளியமன், நினக்கே; பருந்து பட,

பாண்டிலொடு பொருத பல் பிணர்த் தடக் கை

ஏந்து கோட்டு யானை இசை வெங் கிள்ளி

வம்பு அணி உயர் கொடி அம்பர் சூழ்ந்த . . . .

அரிசில் அம் தண் அறல் அன்ன, இவள்

விரி ஒலி கூந்தல் விட்டு அமைகலனே.

பாலை

← பாடல் 1470பாடல் 1472 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்