நூல்கள்›நற்றிணை›பாடல் 1469

பாடல் 1469

பெருங்கௌசிகனார்

உலகிற்கு ஆணியாகப் பலர் தொழ,

பல வயின் நிலைஇய குன்றின் கோடுதோறு

ஏயினை, உரைஇயரோ!- பெருங் கலி எழிலி!

படுமலை நின்ற நல் யாழ் வடி நரம்பு

எழீஇயன்ன உறையினை! முழவின் . . . .

மண் ஆர் கண்ணின் இம்மென இமிரும்-

வணர்ந்து ஒலி கூந்தல் மாஅயோளொடு

புணர்ந்து இனிது நுகர்ந்த சாரல் நல் ஊர்,

விரவு மலர் உதிர வீசி-

இரவுப் பெயல் பொழிந்த உதவியோயே! . . . .

முல்லை

← பாடல் 1468பாடல் 1470 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்