நூல்கள்›நற்றிணை›பாடல் 1468

பாடல் 1468

அம்மூவனார்

உவர் விளை உப்பின் குன்று போல்குப்பை

மலை உய்த்துப் பகரும், நிலையா வாழ்க்கை,

கணம் கொள் உமணர் உயங்குவயின் ஒழித்த

பண் அழி பழம் பார் வெண் குருகு ஈனும்

தண்ணம் துறைவன், முன் நாள், நம்மொடு . . . .

பாசடைக் கலித்த கணைக் கால் நெய்தல்

பூவுடன் நெறிதரு தொடலை தைஇ,

கண் அறிவுடைமை அல்லது, நுண் வினை

இழை அணி அல்குல் விழவு ஆடு மகளிர்

முழங்கு திரை இன் சீர் தூங்கும் . . . .

அழுங்கல் மூதூர் அறிந்தன்றோ இன்றே.

நெய்தல்

← பாடல் 1467பாடல் 1469 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்