நூல்கள்›நற்றிணை›பாடல் 1467

பாடல் 1467

பெருங்கண்ணனார்

தண்ணிய கமழும் தாழ் இருங் கூந்தல்,

தட மென் பணைத் தோள், மட நல்லோள்வயின்

பிரியச் சூழ்ந்தனை ஆயின், அரியது ஒன்று

எய்தினை, வாழிய- நெஞ்சே!- செவ் வரை

அருவி ஆன்ற நீர் இல் நீள் இடை, . . . .

கயந் தலை மடப் பிடி உயங்கு பசி களைஇயர்,

பெருங் களிறு தொலைத்த முடத் தாள் ஓமை

அருஞ் சுரம் செல்வோர்க்கு அல்குநிழல்' ஆகும்

குன்ற வைப்பின் கானம்

சென்று, சேண் அகறல் வல்லிய நீயே! . . . .

பாலை

← பாடல் 1466பாடல் 1468 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்