நூல்கள்›நற்றிணை›பாடல் 1464

பாடல் 1464

ஆசிரியர் அறியப்படவில்லை

'இனிதின் இனிது தலைப்படும்' என்பது

இதுகொல்?- வாழி, தோழி!- காதலர்

வரு குறி செய்த வரையகச் சிறு தினைச்

செவ் வாய்ப் பாசினம் கடீஇயர், 'கொடிச்சி!

அவ் வாய்த் தட்டையொடு அவணை ஆக!' என, . . . .

ஏயள்மன் யாயும்; நுந்தை, 'வாழியர்,

அம் மா மேனி நிரை தொடிக் குறுமகள்!

செல்லாயோ; நின் முள் எயிறு உண்கு' என,

மெல்லிய இனிய கூறலின், யான் அஃது

ஒல்லேன் போல உரையாடுவலே! . . . .

குறிஞ்சி

← பாடல் 1463பாடல் 1465 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்