நூல்கள்›நற்றிணை›பாடல் 1463

பாடல் 1463

நற்றமனார்

'தோளே தொடி கொட்பு ஆனா; கண்ணே

வாள் ஈர் வடியின் வடிவு இழந்தனவே;

நுதலும் பசலை பாயின்று- திதலைச்

சில் பொறி அணிந்த பல் காழ் அல்குல்

மணி ஏர் ஐம்பால் மாயோட்கு' என்று, . . . .

வெவ் வாய்ப் பெண்டிர் கவ்வை தூற்ற,

நாம் உறு துயரம் செய்யலர் என்னும்-

காமுறு தோழி!- காதல்அம் கிளவி,

இரும்பு செய் கொல்லன் வெவ் உலைத் தௌத்த

தோய் மடற் சில் நீர் போல, . . . .

நோய் மலி நெஞ்சிற்கு ஏமம் ஆம் சிறிதே.

குறிஞ்சி

← பாடல் 1462பாடல் 1464 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்