நூல்கள்›நற்றிணை›பாடல் 1462

பாடல் 1462

ஆசிரியர் அறியப்படவில்லை

பேர் ஊர் துஞ்சும்; யாரும் இல்லை;

திருந்து வாய்ச் சுறவம் நீர் கான்று, ஒய்யெனப்

பெருந் தெரு உதிர்தரு பெயலுறு தண் வளி

போர் அமை கதவப் புரை தொறும் தூவ,

கூர் எயிற்று எகினம் நடுங்கும் நல் நகர்ப் . . . .

பயில்படை நிவந்த பல் பூஞ் சேக்கை

அயலும் மாண் சிறையதுவே; அதன்தலை,

'காப்புடை வாயில் போற்று, ஓ' என்னும்

யாமம் கொள்பவர் நெடு நா ஒண் மணி

ஒன்று எறி பாணியின் இரட்டும்; . . . .

இன்றுகொல், அளியேன் பொன்றும் நாளே?

நெய்தல்

← பாடல் 1461பாடல் 1463 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்