நூல்கள்›நற்றிணை›பாடல் 1456

பாடல் 1456

ஆசிரியர் அறியப்படவில்லை

பைங் காய் நல் இடம் ஒரீஇய செங்காய்க்

கருங் களி ஈந்தின் வெண் புறக் களரி

இடு நீறு ஆடிய கடு நடை ஒருத்தல்

ஆள் பெறல் நசைஇ, நாள் சுரம் விலங்கி,

துனைதரும் வம்பலர்க் காணாது, அச் சினம் . . . .

பனைக் கான்று ஆறும் பாழ் நாட்டு அத்தம்,

இறந்து செய் பொருளும் இன்பம் தரும் எனின்,

இளமையின் சிறந்த வளமையும் இல்லை;

இளமை கழிந்த பின்றை, வளமை

காமம் தருதலும் இன்றே; அதனால், . . . .

நில்லாப் பொருட் பிணிச் சேறி;

வல்லே- நெஞ்சம்!- வாய்க்க நின் வினையே!

பாலை

← பாடல் 1455பாடல் 1457 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்