நூல்கள்›நற்றிணை›பாடல் 1455

பாடல் 1455

ஆசிரியர் அறியப்படவில்லை

'இரை தேர் எண்கின் பகு வாய் ஏற்றை

கொடு வரிப் புற்றம் வாய்ப்ப வாங்கி,

நல் அரா நடுங்க உரறி, கொல்லன்

ஊது உலைக் குருகின் உள் உயிர்த்து, அகழும்

நடு நாள் வருதல் அஞ்சுதும் யாம்' என, . . . .

வரைந்து வரல் இரக்குவம் ஆயின், நம் மலை

நல் நாள் வதுவை கூடி, நீடு இன்று

நம்மொடு செல்வர்மன்- தோழி!- மெல்ல

வேங்கைக் கண்ணியர் எருது எறி களமர்

நிலம் கண்டன்ன அகன் கண் பாசறை, . . . .

மென் தினை நெடும் போர் புரிமார்

துஞ்சு களிறு எடுப்பும் தம் பெருங் கல் நாட்டே.

குறிஞ்சி

← பாடல் 1454பாடல் 1456 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்