பாடல் 1445
ஆசிரியர் அறியப்படவில்லை
மலர்ந்த பொய்கைப் பூக் குற்று அழுங்க
அயர்ந்த ஆயம் கண் இனிது படீஇயர்,
அன்னையும் சிறிது தணிந்து உயிரினள்; 'இன் நீர்த்
தடங் கடல் வாயில் உண்டு, சில் நீர்' என,
மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி . . . .
மனை நடு மௌவலொடு ஊழ் முகை அவிழ,
கார் எதிர்ந்தன்றால், காலை; காதலர்
தவச் சேய் நாட்டர்ஆயினும், மிகப் பேர்
அன்பினர்- வாழி, தோழி!- நன் புகழ்
உலப்பு இன்று பெறினும் தவிரலர்; . . . .
கேட்டிசின் அல்லெனோ, விசும்பின் தகவே?
முல்லை