நூல்கள்›நற்றிணை›பாடல் 1443

பாடல் 1443

இளங்கீரனார்

உழை அணந்து உண்ட இறை வாங்கு உயர்சினைப்

புல் அரை இரத்திப் பொதிப் புறப் பசுங் காய்

கல் சேர் சிறு நெறி மல்கத் தாஅம்

பெருங் காடு இறந்தும், எய்த வந்தனவால்-

'அருஞ் செயல் பொருட் பிணி முன்னி, யாமே . . . .

சேறும், மடந்தை!' என்றலின், தான் தன்

நெய்தல் உண்கண் பைதல் கூர,

பின் இருங் கூந்தலின் மறையினள், பெரிது அழிந்து,

உதியன் மண்டிய ஒலி தலை ஞாட்பின்

இம்மென் பெருங் களத்து இயவர் ஊதும் . . . .

ஆம்பல்அம் குழலின் ஏங்கி,

கலங்கு அஞர் உறுவோள் புலம்பு கொள் நோக்கே!

பாலை

← பாடல் 1442பாடல் 1444 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்