நூல்கள்›நற்றிணை›பாடல் 1436

பாடல் 1436

தொண்டைமான் இளந்திரையன்

அறிதலும் அறிதியோ- பாக!- பெருங்கடல்

எறி திரை கொழீஇய எக்கர் வெறி கொள,

ஆடு வரி அலவன் ஓடுவயின் ஆற்றாது,

அசைஇ, உள் ஒழிந்த வசை தீர் குறுமகட்கு

உயவினென் சென்று, யான், உள் நோய் உரைப்ப, . . . .

மறுமொழி பெயர்த்தல் ஆற்றாள், நறு மலர்

ஞாழல் அம் சினைத் தாழ்இணர் கொழுதி,

முறி திமிர்ந்து உதிர்த்த கையள்,

அறிவு அஞர் உறுவி ஆய் மட நிலையே?

நெய்தல்

← பாடல் 1435பாடல் 1437 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்