நூல்கள்›நற்றிணை›பாடல் 1435

பாடல் 1435

முடத்திருமாறன்

முளி கொடி வலந்த முள் அரை இலவத்து

ஒளிர் சினை அதிர வீசி, விளிபட

வெவ் வளி வழங்கும் வேய் பயில் மருங்கில்,

கடு நடை யானை கன்றொடு வருந்த,

நெடு நீர் அற்ற நிழல் இல் ஆங்கண் . . . .

அருஞ் சுரக் கவலைய என்னாய்; நெடுஞ் சேண்

பட்டனை, வாழிய- நெஞ்சே!- குட்டுவன்

குட வரைச் சுனைய மா இதழ்க் குவளை

வண்டு படு வான் போது கமழும்

அம் சில் ஓதி அரும் படர் உறவே. . . . .

பாலை

← பாடல் 1434பாடல் 1436 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்